தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் 4
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பில்லை சிறிது
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு .
செய்முறை:
- வெங்காயம் ,தக்காளி வெட்டி வைக்கவும் .கத்தரிகாயை அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.புளியினை 2கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தயம் போடவும்.
- பிறகு வெங்காயம் மிளகாய் ,கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
- பின் தக்காளி மற்றும் கத்தரிக்காயை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வதக்கவும்.
- இப்போது மஞ்சள் தூள்,மல்லிதூள்.மிளகாய் தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
- கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
- பிறகு கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
- சுவையான கார குழம்பு ரெடி.
1 comment:
Hi shanti, I love your blog. I like to email you. Love it so much. kamala.
Post a Comment