Sunday, March 8, 2009

பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்)



தேவையான பொருட்கள்:
பாசிபயறு 1 கப்
வெங்காயம் பாதி
தக்காளி சின்னது 1
பச்சை மிளகாய் 5
கறிவேப்பில்லை சிறிது
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பூண்டு 2 பல்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் பாசிபயற்றை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் .
  • பின்பு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்தவுடன் தக்காளி,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் மூடி வைத்து வேக விடவும்.
  • பருப்பு வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் , வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை,தனியா,சீரகம் (இரண்டையும் கையில் தேய்த்து போடவும் ).
  • அனைத்தையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.வதங்கின பின் வேக வைத்த பயறையும் சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு பூண்டை நசுக்கி போட்டு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • குழம்பு ரெடி.
சூடான சாதத்தில் குழம்பை ஊற்றி நெய் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.
குறிப்பு:
பாசி பயறை குக்கரில் வேக வைக்க கூடாது .தனியாக பாத்திரத்தில் வேக
வைத்தால்தான் சுவையாக இருக்கும்.

No comments: