பீர்கங்காய் 1
பாசிபருப்பு 1 கப்
வெங்காயம் 1 (சிறியது)
தக்காளி 1 (சிறியது)
பச்சை மிளகாய் 3
கறிவேப்பில்லை சிறிது
மஞ்சள்தூள் 1 teaspoon
சாம்பார்தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
- பீர்கங்காயை தோல் சீவி பொடியாக கட் பண்ணவும்.
- வெங்காயம் பச்சைமிளகாய்,தக்காளி கட் பண்ணி வைக்கவும்.
- முதலில் பாசி பருப்பை லேசாக வாசம் வரும் வறுத்துவிட்டு பிறகு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- பருப்பு பாதி வெந்தவுடன் தக்காளி .காய்,உப்பு,மஞ்சள்தூள்,சாம்பார்தூள் அனைத்தும் போட்டு வேக விடவும்.
- காய் வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி வெந்த பருப்பை எடுத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
- சூடான சாதத்துடன் சாப்பிடவும்.
குறிப்பு:
பருப்பை நன்கு குலைய வேக வைக்க கூடாது.
No comments:
Post a Comment