Saturday, February 28, 2009
செட்டிநாடு சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு .
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு .
வறுத்து அரைக்க:
தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி
மிளகு 2 மேசை கரண்டி
கசகசா 2 மேசைகரண்டி
பட்டை 3 துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 4
ஜாதிபூ 4
அன்னாசி பூ 1
வரமிளகாய் 10
தேங்காய் 2 மேசைகரண்டி
பொட்டுகடலை 1 மேசைகரண்டி
- மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
- கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து
- குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.
செய்முறை:
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
- வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
- இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .
- பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .
- சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.
Labels:
chettinaadu,
chicken,
gravy,
masala
Thursday, February 26, 2009
இறால் தொக்கு
தேவையான பொருட்கள்:
இறால் கால் கிலோ
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
மல்லி தூள 1மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 2மேசைக்கரண்டி
சோம்பு 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு தேவையான அளவு
செய்முறை :
- முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து அத்துடன் மஞ்சள் தூள் ,சிறிது உப்பு ,கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது, கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு சிறிது நேரம் வைக்கவும் .
- பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஆயில் போட்டு சோம்பு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கின பிறகு மீதியுள்ள இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் .
- இப்போது தக்காளி சேர்க்கவும் .பிறகு இறாலை சேர்த்து மிளகாய் தூள்,மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.அதுவே தானகவே நீர் விட்டுக்கொள்ளும் .அதனால் தண்ணீர் சேர்க்க வேண்டாம் . தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சிறிது சேர்க்கவும் .
- நன்கு கிளறி சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும் .
- கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும் .
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும் .
கோழி கொழம்பு
கோழி 1கிலோ
பட்டை 2
கிராம்பு 2
சோம்பு 2ஸ்பூன்
சோம்பு 2ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
கச கச 2ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் 2ஸ்பூன்
மல்லி தூள் 2ஸ்பூன்
தேங்காய் 4ஸ்பூன்
தேங்காய் 4ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
வர மிளகாய் 4
முந்திரி 4
வெங்காயம் 2
தக்காளி 2
எண்ணெய் 5ஸ்பூன்
உப்பு தேவையான் அளவு
அரைக்க:
- மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லிதூள்,சோம்பு,சீரகம்,தேங்காய்,கச கச , முந்திரி அனைத்தையும் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் .
செய்முறை:
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,மிளகாய் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்க்கவும் .சிறிது வதங்கின பிறகு கோழி துண்டுகளை சேர்த்து வதக்கவும் .
- நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கி பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிறிது குறைத்து வைத்து மூடி வைக்கவும்.
- பின்பு நன்கு வெந்தவுடன் இறக்கி மல்லி இலைகளை சேர்க்கவும் .
- சூடான சுவையான கோழி கொழம்பு ரெடி .
Wednesday, February 25, 2009
வௌவால் மீன் ப்ரை
- தேவையான பொருட்கள் :
மீன் 1kg
இஞ்சி பூண்டு பேஸ்ட்1tablespoon
மிளகாய் தூள் 4tablespoon
மிளகு தூள் 2teaspoon
மஞ்சள்தூள் 2teaspoon
எலுமிச்ச பழ சாறு 2tablespoon
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 6tablespoon
மேற்கூறிய அனைத்தையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசறி குறைந்தது 3மணி நேரம் ஊற வைக்கவும் .
செய்முறை :
- கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மீன் துண்டுகளை போடவும்.
- சிறிது நேரம் கழித்து வெந்தவுடன் மறு பக்கம் மெதுவாக திருப்பி விடவும்.
- பின்னர் எடுத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
எல்லா வகை மீனும் இப்படி வறுத்தால் சூப்பராக இருக்கும்.லெமன் ரைஸ் ,ஃப்ரயிட் ரைஸ்,சாம்பார் சாதம் அனைத்துக்கும் நல்ல சூப்பர் காம்பினேஷன்.
Monday, February 23, 2009
Subscribe to:
Posts (Atom)