Saturday, February 28, 2009

செட்டிநாடு சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு .

வறுத்து அரைக்க:
தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி

மிளகு 2 மேசை கரண்டி

கசகசா 2 மேசைகரண்டி

பட்டை 3 துண்டு

கிராம்பு 3

ஏலக்காய் 4

ஜாதிபூ 4

அன்னாசி பூ 1

வரமிளகாய் 10

தேங்காய் 2 மேசைகரண்டி

பொட்டுகடலை 1 மேசைகரண்டி

  1. மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
  2. கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து
  3. குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.

செய்முறை:

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
  • வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  • இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .
  • பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .
  • சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.

No comments: