Wednesday, March 11, 2009

மீன் குழம்பு ( FISH CURRY )

தேவையான பொருட்கள்:
மீன் 1 / 2 கிலோ
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 2 பல்
சின்ன வெங்காயம் 3
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
கறிவேப்பில்லை ஒரு கொத்து
தேங்காய்துருவல் 3 மேசைகரண்டி
மிளகாய் தூள் 3 மேசைகரண்டி
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
மல்லிதூள் 3 மேசைகரண்டி
நல்லெண்ணெய் 3 மேசைகரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் மீனை கழுவி சுத்தம் செய்துவிட்டு உப்பு, மிளக்காயதூள் சிறிது மஞ்சள்தூள் கொஞ்சம் போட்டு பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளியை பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
  • புளி கரைத்து வைக்கவும்.
  • சின்ன வெங்காயம் ,பூண்டு ,கறிவேப்பில்லை சிறிது மூன்றையும் நசுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும் பொரிந்ததும் வெந்தயம் போடவும் .
  • பிறகு நசுக்கி வைத்த வெங்காயம்,பூண்டு,கறிவேப்பில்லை விழுதை போட்டு வதக்கவும்.பின்னர் வெங்காயம் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள்,மல்லிதூள்,மிளக்காயதூள்,உப்பு போடவும்.
  • அனைத்தையும் எண்ணெயில் நன்கு வதக்கி பிறகு புளி ஊற்றவும். தேவைப்பட்டால் அதற்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • இப்போது தேங்காயை நன்கு அரைத்து சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் மீன் துண்டுகளை சேர்க்கவும்.கரண்டி போட்டு கிண்ட வேண்டாம்.மீன் உடைந்து விடும் .
  • மூடி வைத்து அடுப்பை குறைத்து வைக்கவும்.மீன் வெந்தவுடன் இறக்கவும்.
  • மணக்கும் மீன் குழம்பு தயார்.

மீன் ஃப்ரை.( fish fry )

தேவையான பொருட்கள்:
மீன் 1 / 2 கிலோ
மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்.
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
லைம் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
அரைக்க:
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 / 2 டீஸ்பூன்
மிளகு 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
செய்முறை:
  • முதலில் மீனை மஞ்சள் தூள் போட்டு கழுவி நன்றாக சுத்தம் செய்து தண்ணீரை வடித்து கொள்ள வேண்டும்.
  • மேற்குறிய அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துகொண்டு அத்துடன் மிளக்காயதூள்,மஞ்சள்தூள்,உப்பு,லைம் ஜூஸ் கலந்து மீனுடன் பிசறி ஊற வைக்க வேண்டும்.
  • கொஞ்ச நேரம்மாவது ஊற விட்டால்தான் மசாலா மீனில் இறங்கும்.
  • தவ்வாவில் எண்ணெய் விட்டு சூடானதும் இரண்டு இரண்டு துண்டுகளாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
  • சுவையான சூடான மீன் ஃப்ரை ரெடி.

பீர்க்கங்காய் கூட்டு (பீர்க்க்கங்காய் பாசி பருப்பு)

தேவையான பொருட்கள்:
பீர்கங்காய் 1
பாசிபருப்பு 1 கப்
வெங்காயம் 1 (சிறியது)
தக்காளி 1 (சிறியது)
பச்சை மிளகாய் 3
கறிவேப்பில்லை சிறிது
மஞ்சள்தூள் 1 teaspoon
சாம்பார்தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • பீர்கங்காயை தோல் சீவி பொடியாக கட் பண்ணவும்.
  • வெங்காயம் பச்சைமிளகாய்,தக்காளி கட் பண்ணி வைக்கவும்.
  • முதலில் பாசி பருப்பை லேசாக வாசம் வரும் வறுத்துவிட்டு பிறகு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • பருப்பு பாதி வெந்தவுடன் தக்காளி .காய்,உப்பு,மஞ்சள்தூள்,சாம்பார்தூள் அனைத்தும் போட்டு வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி வெந்த பருப்பை எடுத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
  • சூடான சாதத்துடன் சாப்பிடவும்.

குறிப்பு:
பருப்பை நன்கு குலைய வேக வைக்க கூடாது.

பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - 1 / 2
காய்ந்த மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 2டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
தேங்காய்துருவல் 2 மேசைகரண்டி
கருவேப்பில்லை சிறிது
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • பீன்ஸ் பொடியாகவோ அல்லது நீளவாக்கிலோ கட் பண்ணி வைக்கவும்.
  • வெங்காயம் பொடியாக கட் பண்ணவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போடவும்.
  • பின்பு வெங்காயம்,மிளகாய்,கருவேப்பில்லை போட்டு வதக்கி காயை சேர்த்து வதக்கவும்..
  • காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கின பிறகு தண்ணீர் லேசாக தெளித்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
  • காய் வெந்தவுடன் உப்பு சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து1 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

Monday, March 9, 2009

ஸ்பெஷல் முட்டை ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
முட்டை 2
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சமிளகாய் 2
கறிவேப்பில்லை சிறிது
கொத்தமல்லி தலை சிறிது
மிளகு தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
  • வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொதமல்லிதலை பொடியாக கட் பண்ணி வைக்கவும் .
  • தனியாக ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்து கட் பண்ணிய அனைத்து பொருட்களுடனும் சேர்த்து உப்பு போட்டு கலக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கலவையை ஊற்றவும்.
  • மிளகு தூளை லேசாக தூவவும்.
  • சிறிது பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக ஆனவுடன் எடுக்கவும்.

அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி 2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 3
வர மிளகாய் 3
எண்ணெய் 2 அல்லது 3 மேசைகரண்டி
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பூண்டு 4 பல்
கறிவேப்பில்லை சிறிது
தண்ணீர் 6 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
  • அரிசியை கழுவி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பருப்பை கழுவி வைக்கவும்.
  • வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும் .
  • பிறகு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் தக்காளி போடவும். தக்காளி வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றவும்.
  • இப்போது உப்பு மஞ்சள் தூள் போடவும். பின்னர் சீரகம்,மிளகு,பூண்டு மூன்றையும் அரைத்து போடவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசிபருப்பை போடவும்.
  • நன்கு கலக்கி குக்கர் மூடி போட்டு வெயிட் போடவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .3 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறக்கவும்.
  • அரிசி பருப்பு சாதம் ரெடி.
குறிப்பு:
சாதத்தில் நெய் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
இது கொங்கு நாட்டு ஸ்பெஷல் .
இது மிக எளிதில் செய்யக்கூடிய சாதம்.

Sunday, March 8, 2009

பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்)



தேவையான பொருட்கள்:
பாசிபயறு 1 கப்
வெங்காயம் பாதி
தக்காளி சின்னது 1
பச்சை மிளகாய் 5
கறிவேப்பில்லை சிறிது
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பூண்டு 2 பல்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் பாசிபயற்றை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் .
  • பின்பு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்தவுடன் தக்காளி,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் மூடி வைத்து வேக விடவும்.
  • பருப்பு வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் , வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை,தனியா,சீரகம் (இரண்டையும் கையில் தேய்த்து போடவும் ).
  • அனைத்தையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.வதங்கின பின் வேக வைத்த பயறையும் சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு பூண்டை நசுக்கி போட்டு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • குழம்பு ரெடி.
சூடான சாதத்தில் குழம்பை ஊற்றி நெய் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.
குறிப்பு:
பாசி பயறை குக்கரில் வேக வைக்க கூடாது .தனியாக பாத்திரத்தில் வேக
வைத்தால்தான் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ் ( potato podimas )


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு 4

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 4

கறிவேப்பில்லை ஒரு கொத்து

கொத்தமல்லி தலை சிறிது

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்

கடலை பருப்பு 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

எண்ணெய் 1 கரண்டி

உப்பு தேவையான் அளவு

செய்முறை:


  • முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து லேசாக மசித்து கொள்ளவும்.

  • வெங்காயம் நீளவாக்கில் கட் பண்ணவும். பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும்

  • உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்க்கவும்.

  • இப்போது வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

  • பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும். கிளறவும்.

  • பிறகு மசித்த உருளைகிழங்கையும் சேர்த்து கிளறி அடுப்பை 5 நிமிடம்சிம்மில் வைக்கவும்.

  • இறுதியில் கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.

  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

சிக்கன் பிரியாணி ( chicken briyani )

தேவையான பொருட்கள்:
சிக்கன் 1/2 கிலோ
பாசுமதி அரிசி 3 கப்
இஞ்சி பூண்டு விழுது 4 மேசை கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 1
பச்ச மிளகாய் 5
பொதினா 1 கைப்பிடி நறுக்கியது
கொத்தமல்லி தலை 1 கைப்பிடி நறுக்கியது
தயிர் 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசை கரண்டி
நெய் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
பட்டை 2
கிராம்பு 2
ஏலக்காய் 2
பிரியாணி தலை 2
அன்னாசி பூ 1
செய்முறை:
  • வெங்காயம் நீளமாகவும் ,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும் .
  • அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,பிரியாணி தலை ,அன்னாசி பூ ,ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு பச்ச மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
  • இப்போது இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும் .
  • பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் .அத்துடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி தலை ,பொதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .
  • பிறகு தயிரை சேர்க்கவும் .நன்கு கிளறி பத்து நிமிடம் மூடி வைக்கவும் .
  • இப்போது சிக்கன் பாதிக்கு மேல் வெந்து இருக்கும் .இந்த தருணத்தில் அரிசியை சேர்த்து ரொம்ப மெதுவாக அரிசி உடையாமல் கிளறவும் .
  • பின் தண்ணீர் 1 கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு அரிசி உடையாமல் கிளறவும்.நெய் சேர்க்கவும்.
  • இப்போது குக்கர் மூடி போட்டு அடுப்பை குறைத்து வைக்கவும்.
  • ஒரு விசில் விடவும் .அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து மெதுவாக கலக்கவும் .
  • சுவையான கம கமன்னு மணக்கும் சிக்கன் பிரியாணி ரெடி .
குறிப்பு:
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Friday, March 6, 2009

கத்தரிக்காய் கார குழம்பு


தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் 4
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பில்லை சிறிது
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு .

செய்முறை:
  • வெங்காயம் ,தக்காளி வெட்டி வைக்கவும் .கத்தரிகாயை அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.புளியினை 2கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தயம் போடவும்.
  • பிறகு வெங்காயம் மிளகாய் ,கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
  • பின் தக்காளி மற்றும் கத்தரிக்காயை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • இப்போது மஞ்சள் தூள்,மல்லிதூள்.மிளகாய் தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
  • கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
  • பிறகு கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான கார குழம்பு ரெடி.